குழந்தையை குறிவைத்த இணைய மிரட்டல்..!!! போலீஸ் விசாரணை தீவிரம்..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ளூர் இணைய பிரபலமான ஒருவர்,நேரடி ஒளிபரப்பின் போது அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து கடுமையான மிரட்டல்களை எதிர்கொண்டுள்ளார்.
அவரது மகனை புதிய பள்ளியில் சேரும் போது தாக்குவோம் என நேரலை கருத்துப் பகுதியில் மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி காலை நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிரட்டல் விடுத்த நபரின் கணக்கை தடை செய்தபோதும், அவர் வேறு கணக்குகளை பயன்படுத்தி மீண்டும் மீண்டும் நேரடி ஒளிபரப்பில் நுழைந்து அதேபோன்ற அச்சுறுத்தல்களை விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி காலை நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிரட்டல் விடுத்த நபரின் கணக்கை தடை செய்தபோதும், அவர் வேறு கணக்குகளை பயன்படுத்தி மீண்டும் மீண்டும் நேரடி ஒளிபரப்பில் நுழைந்து அதேபோன்ற அச்சுறுத்தல்களை விடுத்ததாக கூறப்படுகிறது.
ஆன்லைன் மிரட்டலும் சைபர் வன்முறையும் சட்டவிரோதமானவை என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற அச்சுறுத்தல்களை யாரும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.