பொங்கோல் HDBயில் தீ விபத்து..!! மூவர் மருத்துவமனையில் அனுமதி..!!
சிங்கப்பூர்: பொங்கோலில் உள்ள HDB அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் எழுந்த புகையை சுவாசித்ததால் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் மொபிலிட்டி எய்ட் சாதனத்துடன் (PMA) தொடர்புடையதாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை தெரிவித்ததாவது, வெள்ளிக்கிழமை (13.02.26) காலை 7:05 மணியளவில் பொங்கோலில் உள்ள சுமாங் வாக், பிளாக் 326C இல் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
16வது மாடியில் உள்ள ஒரு குடியிருப்பு பிரிவின் வாழ்க்கை அறையில் இருந்த பொருட்கள் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்துக்குச் சென்ற SCDF பணியாளர்கள் தண்ணீர் குழாயைப் பயன்படுத்தி தீயை கட்டுப்படுத்தினர்.
புகையை உள்ளிழுத்ததால் பாதிக்கப்பட்ட மூவர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அவர்களின் நிலை குறித்து மேலதிக தகவல் வெளியாகவில்லை.
முதற்கட்ட விசாரணைகளில், தீ விபத்து ஒரு தனிநபர் இயக்க உதவி சாதனம் (PMA) மூலம் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. தீ ஏற்பட்டதற்கான துல்லிய காரணத்தை கண்டறிய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.