MOM பெயரில் நடந்த மோசடி..!! சிங்கப்பூர் காவல் துறை அதிரடி நடவடிக்கை..!!
சிங்கப்பூர்: மனிதவள அமைச்சகம் (MOM) போல் நடித்து ஆள்மாறாட்டம் செய்த மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றி தீங்கு விளைவிக்கக்கூடிய நிரல்களை பதிவிறக்கம் செய்ய வைத்துள்ளனர்.
இந்த மோசடி குறித்து சிங்கப்பூர் காவல்துறை நேற்று (மே 19) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் மோசடி செய்பவர்கள் மனிதவள அமைச்சகம் போல் ஆள்மாறாட்டம் செய்து பாதிக்கப்பட்டவர்களின் நிறுவனங்கள் வேலைவாய்ப்புச் சட்டத்தை மீறி விட்டதாக கூறுகின்றனர். பிறகு திருத்த ஆவணத்தை பார்ப்பதற்காக ஒரு இணைப்பை கிளிக் செய்யுமாறு அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறார்கள்.
அவர்கள் அனுப்பிய இணைப்பை கிளிக் செய்த பிறகு பாதிக்கப்பட்டவர்கள் போலி MOM இணையதளத்திற்குள் செல்கின்றனர்.
பின்பு மோசடிக்காரர்கள் திருத்தக் கோப்பு என்ற பெயரிடப்பட்ட ஒரு இணைப்பைப் பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்துகின்றனர். ஆனால் அந்த கோப்பில் உண்மையில் தீங்கு நிரல் உள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் அந்த கோப்பை திறந்தவுடன் அந்த தீங்கு நிரல் அவரது சாதனத்தில் அனுமதியின்றி பதிவேற்றப்படுகிறது. இதன் மூலம் மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவர்களின் சாதனங்களைத் தொலைவில் இடருந்து கட்டுப்படுத்த முடிகிறது.
இதனால் காவல்துறை இது தொடர்பான 10 இணையதளங்களை முடக்கியுள்ளது. மேலும் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களில் உள்ள இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என காவல்துறை பொதுமக்களுக்கு சரித்துள்ளது.
மின்னஞ்சல் ஒரு அரசு நிறுவனத்திடம் இருந்து வந்ததாக தோன்றினால் அதன் நம்பகத்தன்மையை அதிகாரப்பூர்வ அரசு வழிமுறைகள் மூலம் பொதுமக்கள் சரிபார்க்க வேண்டும். மேலும் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் கோப்புகளைப் பதிவிறக்கம் செய்வதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
பணம் அனுப்புவதற்கோ, வங்கியின் உள்நுழைவுத் தகவல்களை வெளியிடவோ,அங்கீகரிக்கப்படாத செயலியை அங்காடிகளில் இருந்து பதிவேற்றுவதற்கோ அல்லது தொலைபேசி அல்லது மின்னஞ்சல் வழியாக காவல்துறைக்கு அழைப்புகளைப் பரிந்துரைக்கவோ அதிகாரிகள் யாரையும் கேட்க மாட்டார்கள் என்பதை MOM பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.