மாண்டாயில் புதிய தகனம் மையம் மற்றும் Garden of Serenity .!!! இது குறித்த முழு விவரத்தையும் அறிய இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்...!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தேசிய சுற்றுச்சூழல் முகமை (NEA) அறிவித்ததன்படி, புதிய மாண்டாய் வடக்கு தகனம் மையமும் அதனுடன் இணைந்துள்ள “Garden of Serenity” எனப்படும் அஸ்தி தூவும் பூங்காவும் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது.
இந்த புதிய வசதிகள், சிங்கப்பூரில் உயரும் இறப்புகளின் எண்ணிக்கையை எதிர்கொள்வதற்கான தீர்வாக அமைகின்றன.
மாண்டாய் கிரிமேட்டோரியம் மற்றும் கொலும்பேரியம் வளாகத்துக்கு அருகில் அமைந்துள்ள இந்த மையம், தற்காலிக தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மூன்று சேவை மண்டபங்கள் மற்றும் ஒன்பது தகன பொறிகள் கொண்டதாக துவக்கத்தில் செயல்பட உள்ளது.
இதன் முழு திறன் ஆறு சேவை மண்டபங்கள் மற்றும் 18 தகன பொறிகள் ஆகும்.
தானியங்கி வழிநடத்தும் வாகனங்கள் மற்றும் சுய சேவை முறை கொண்ட அஸ்தி சேகரிப்பு மையம் என்பன இதில் இடம்பெற்றுள்ளன.
ஆனால் பராமரிப்பு வேலைகளுக்காக சில நாட்களில் மூடப்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், புதிய தகனம் சேவைக்கான முன்பதிவுகள் ஆகஸ்டு 9, 2025 முதல் NEA தளத்தில் கிடைக்கும்.
தோட்டத்தில் அஸ்தியைத் தூவுதற்கு www.eportal.nea.gov.sg எனும் இணைய வாசல் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.இந்த சேவைக்கான கட்டணம் S$320 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் மக்கள் வளர்ந்துவரும் இறப்புகளின் எண்ணிக்கையை எதிர்கொள்வதற்கான நவீன மற்றும் மரியாதையான தீர்வாக இந்த மையம் அமைந்துள்ளது.
சிங்கப்பூரில் ஆண்டுதோறும் ஏற்படும் மரணங்கள் 2024 இல் 25,000 என்ற அளவில் இருந்தால், 2040ல் 40,000 என்ற அளவிற்கு அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது.
இதற்கேற்ப, இந்த புதிய வசதிகள் மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது.