சிங்கப்பூரில் புதிய போர்டல் அறிமுகம்..!! இதன் சிறப்பம்சம் என்ன..??

சிங்கப்பூரில் புதிய போர்டல் அறிமுகம்..!! இதன் சிறப்பம்சம் என்ன..??

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பார்வைக் குறைபாடுள்ளவர்களும் அவர்களைப் பராமரிப்பவர்களும் தேவையான சேவைகள் மற்றும் தகவல்களை ஒரே இடத்தில் எளிதாக பெறுவதற்காக,முதல் ஒற்றை நிலை குறைந்த பார்வை வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வலைத்தளம் “எல்லையற்ற பார்வை”என்ற நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வை சிங்கப்பூர் தேசிய கண் மையமும் சமூக நிறுவனம் எஸ்ஜி அசிஸ்டும் இணைந்து நடத்தியது.

இந்த வலைத்தளம் கண் நோய்கள், மொபைல் மற்றும் அணுகல் விருப்பங்கள், மேலும் சமூக ஆதரவு திட்டங்கள் குறித்த தகவல்களை வழங்குகிறது.

இதில் பயனர்கள் எழுத்துரு அளவை மாற்றுதல், வண்ண மாறுபாடு மற்றும் குரல் வாசிப்பு போன்ற தனிப்பயனாக்கக்கூடிய அம்சங்களைப் பயன்படுத்தி தங்களுக்கேற்றவாறு தகவல்களை அணுக முடியும்.

இது வெவ்வேறு பார்வை நிலைமைகளைக் கொண்டவர்களுக்கு பயன்பாட்டை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் தேசிய கண் மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பேராசிரியர் ஆங் டின், “எல்லையற்ற பார்வை” என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்வில், மக்கள் தொகை வயதாகும் நிலையிலே வயது சார்ந்த பார்வை இழப்பு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக கூறினார். குறிப்பாக, வயது சார்ந்த மாகுலர் சிதைவு (AMD) 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் பார்வை இழப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். சிங்கப்பூரில் சுமார் 5 முதல் 7 சதவீதம் பெரியவர்கள் இந்த நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK