டவுன்ஷென்ட் சாலையில் நடந்த விபத்து குறித்து போலீஸ் விசாரணை..!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் டவுன்ஷென்ட் சாலையில் போக்குவரத்துக்கு எதிராக சைக்கிளில் சென்ற ஒரு ஆண் மற்றும் பெண், எதிரே வந்த காருடன் தற்செயலாக மோதிய சம்பவம் பதிவாகியுள்ளது.
SG Road Vigilante சமூக ஊடகப் பக்கத்தில் வெளியான காணொளியின் அடிப்படையில், இருவரும் எதிர்திசையில் அருகருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிரே வந்த காரைக் கவனித்த அவர்கள் சாலையின் ஓரமாகச் செல்ல முயன்றபோது சமநிலையை இழந்து ஒன்றோடொன்று மோதினர்.இரண்டு சைக்கிள்களும் வேகத்தைக் குறைக்காமல், சரியான நேரத்தில் நின்றிருந்த காரின் மீது மோதியதாக கூறப்படுகிறது.
விபத்துக்குப் பிறகு, அந்த ஆண் காரின் ஓட்டுநரிடம் மன்னிப்பு கேட்டதாகவும், இது காரின் டேஷ்கேம் பதிவில் தெளிவாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.