டவுன்ஷென்ட் சாலையில் நடந்த விபத்து குறித்து போலீஸ் விசாரணை..!!

டவுன்ஷென்ட் சாலையில் நடந்த விபத்து குறித்து போலீஸ் விசாரணை..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் டவுன்ஷென்ட் சாலையில் போக்குவரத்துக்கு எதிராக சைக்கிளில் சென்ற ஒரு ஆண் மற்றும் பெண், எதிரே வந்த காருடன் தற்செயலாக மோதிய சம்பவம் பதிவாகியுள்ளது.

SG Road Vigilante சமூக ஊடகப் பக்கத்தில் வெளியான காணொளியின் அடிப்படையில், இருவரும் எதிர்திசையில் அருகருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிரே வந்த காரைக் கவனித்த அவர்கள் சாலையின் ஓரமாகச் செல்ல முயன்றபோது சமநிலையை இழந்து ஒன்றோடொன்று மோதினர்.இரண்டு சைக்கிள்களும் வேகத்தைக் குறைக்காமல், சரியான நேரத்தில் நின்றிருந்த காரின் மீது மோதியதாக கூறப்படுகிறது.

விபத்துக்குப் பிறகு, அந்த ஆண் காரின் ஓட்டுநரிடம் மன்னிப்பு கேட்டதாகவும், இது காரின் டேஷ்கேம் பதிவில் தெளிவாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் இருவரும் சம்பவ இடத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.
சிறிது நேரத்துக்குப் பிறகு அவர்கள் மீண்டும் சம்பவ இடத்திற்குத் திரும்பி ஓட்டுநருடன் பேசினர்.

ஆனால் போலீசாரை தொடர்பு கொண்டதாக ஓட்டுநர் தெரிவித்ததும், அதிகாரிகள் வருவதற்கு முன்பே இருவரும் தங்கள் சைக்கிள்களில் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக அந்த இரண்டு சைக்கிள் ஓட்டுநர்களை கண்டறிய போலீசார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK