பிரைஸ்ஹேவனில் நடந்த அதிர்ச்சி தாக்குதல்..!! பெண் மீது குற்றச்சாட்டு..!!
சிங்கப்பூர்: சால்வேஷன் ஆர்மி பிரைஸ்ஹேவன் சேகரிப்பு தளத்தை சேதப்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில், சீன வம்சாவளியைச் சேர்ந்த 43 வயது ஆஸ்திரேலியப் பெண் மீது இன்று (27.12.25) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது.
கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி காலை 9.15 மணியளவில், மேல் புக்கிட் திமா சாலையில் அமைந்துள்ள சால்வேஷன் ஆர்மி பிரைஸ்ஹேவன் சேகரிப்பு நிலையத்தில் நாசவேலை நடைபெற்றதாக காவல்துறைக்கு உதவி கோரி அழைப்பு வந்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கட்டிடத்தின் சுவர்களிலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மூன்று லாரிகளிலும் சிவப்பு ஸ்ப்ரே பெயிண்டைப் பயன்படுத்தி தாக்குதல் செய்திகள் எழுதப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.
சம்பவ இடத்தில் கிடைத்த சிவப்பு நிற ஸ்ப்ரே பெயிண்ட் டப்பாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறை, சந்தேக நபரின் அடையாளத்தை உறுதிசெய்து, ஐந்து மணி நேரத்திற்குள் அந்தப் பெண்ணைக் கைது செய்தது.
இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு அதிகபட்சமாக S$2,000 அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மேலும்,வேண்டுமென்றே நாசவேலை செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று முதல் எட்டு பிரம்படிகள் வரை தண்டனை விதிக்க சட்டம் அனுமதிக்கிறது. இருப்பினும், பெண்களுக்கு பிரம்படி தண்டனையில் விலக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.