SIA: கூடுதல் விமான சேவைகள் அறிவிப்பு..!! எதற்காக..??
சிங்கப்பூருக்கும் ஐரோப்பிய நகரங்களுக்கும் இடையேயான விமான சேவைகளை 15 க்கும் மேலாக மார்ச் மாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ், லுஃப்தான்ஸா, மற்றும் ஏர் பிரான்ஸ் ஆகிய விமான சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே செல்வதற்கு மாற்று வழிகளை பயன்படுத்த கூடுதல் விமான சேவைகள் வழங்கப்படும் என்று சாங்கி விமான குழுமம் தெரிவித்திருக்கிறது.
இதன் மூலமாக பயணிகள் ஈரான் போர் நிலவி வரும் சூழலில் மத்திய கிழக்கு விமான சேவைகளை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை தெரிவித்துள்ளது.
மேலும் இந்த விமான பாதைகளுக்கான தேவையானது தற்போது அதிகரித்து வருவதால் கூடுதல் விமான சேவை கணக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தாங்கி விமான குழுமம் தெரிவித்திருக்கிறது.