வியட்நாமிற்கு ஆகாயம் வழிச்சென்ற சிங்கப்பூரின் அன்பு ..!!
சிங்கப்பூர்: வியட்நாமிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்க சிங்கப்பூர் ஆயுதப்படை உதவி வருகிறது.
ஆயுதப்படைகள் ஒரு அறிக்கையில் தெரிவித்ததாவது, சாங்கி பிராந்திய மனிதாபிமான நிவாரண கட்டளை மையம் (RHCC) மற்றும் கரிட்டாஸ் மனிதாபிமான உதவியுடன் இணைந்து, வணிக விமான சரக்கு வழியாக வியட்நாமிற்கு வெப்பப் போர்வைகள் மற்றும் சுகாதாரப் பெட்டிகள் உட்பட ஐந்து டன்களுக்கும் அதிகமான நிவாரணப் பொருட்களை நன்கொடையாக வழங்கியதாக கூறியது.
இந்த மனிதாபிமான உதவி சிங்கப்பூருக்கும் வியட்நாமுக்கும் இடையிலான அன்பான மற்றும் நட்புரீதியான பாதுகாப்பு உறவுகளை எடுத்துக்காட்டுகிறது.
2022 ஆம் ஆண்டில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் புதிய பதிப்பு கையெழுத்தானதிலிருந்து பேரிடர் நிவாரணத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பை மேலும் ஒருங்கிணைக்கிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.