சிங்கப்பூரின் எண்ணெய் சாராப் பொருட்களின் ஏற்றுமதி அதிகரிப்பு…!!

சிங்கப்பூரின் எண்ணெய் சாராப் பொருட்களின் ஏற்றுமதி அதிகரிப்பு...!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் எண்ணெய் சாராப் பொருட்களின் ஏற்றுமதிகள் தொடர்ந்து மூன்று மாதங்களாக வளர்ந்து வருகின்றன.

இது விரைவான வளர்ச்சியைக் கண்டுள்ளதாக எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு வெள்ளிக்கிழமை (மே 16) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் எண்ணெய் சாராப் பொருள்களின் ஏற்றுமதி 12.4 சதவீதம் அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் ஏற்றுமதி 5.4 சதவீதமாக பதிவாகியுள்ளது.

இந்த வளர்ச்சி முந்தைய மாதத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

மின்னணு மற்றும் மின்னியல் சாராப் பொருட்களின் ஏற்றுமதி 39.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தோனேசியா, தைவான் மற்றும் தென் கொரியாவிற்கான ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

சீனா மற்றும் மலேசியாவுக்கான ஏற்றுமதிகள் குறைந்துள்ளன.

குறிப்பாக சீனாவின் எண்ணெய் சாரப் பொருட்களின் ஏற்றுமதி 17 சதவீதம் குறைந்தது.

ஏப்ரல் மாதத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இரண்டும் அதிகரித்ததால் மொத்த வர்த்தகம் சுமார் 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

முன்னதாக, ப்ளூம்பெர்க் நடத்திய கருத்துக் கணிப்புகளின்படி, சிங்கப்பூரின் ஏற்றுமதி ஏப்ரல் மாதத்தில் 4.3 சதவீதம் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்திருந்தனர். ஆனால் வளர்ச்சி அதைவிட மிக அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.