செங்காங்கில் மறுசுழற்சித் தொட்டியில் திடீர் தீ விபத்து!
சிங்கப்பூர்: செங்காங்கில் உள்ள காம்பஸ்வேல் கிரசென்ட், பிளாக் 289B-இல் மறுசுழற்சித் தொட்டியில் இருந்த பொருட்கள் திடீரென தீப்பிடித்ததால், திங்கட்கிழமை (10ஆம் தேதி) தீ விபத்து ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக திங்கட்கிழமை இரவு சுமார் 8:10 மணியளவில் சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படைக்கு (SCDF) தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் கிடைத்ததும் SCDF சம்பவ இடத்துக்கு விரைந்தது. இருப்பினும், SCDF அங்கு வருவதற்கு முன்பே, அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வீட்டுக் குழாய்களைப் பயன்படுத்தி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பொதுமக்களின் துரித நடவடிக்கையால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, பின்னர் முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்தத் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என SCDF தெரிவித்துள்ளது.