சிங்கப்பூர்: காவல்துறை ஆணையர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வருவதாக காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள்,காவல் ஆணையரிடமிருந்து வந்ததாக கூறப்படும் மின்னஞ்சல்களைப் பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த மின்னஞ்சல்களில் சிங்கப்பூரின் சைபர் பாதுகாப்பு நிறுவனமும் காவல்துறையும் பாதிக்கப்பட்டவரின் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர் ஒரு நியமிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு எழுத்துப்பூர்வ அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது கைது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், இத்தகைய மின்னஞ்சல்கள் காவல்துறையினராலும் அல்லது அரசு அதிகாரிகளாலும் அனுப்பப்படுவதில்லை என காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
அரசு அதிகாரிகள் ஒருபோதும் பணம் மாற்றவும்,வங்கி விவரங்களை வழங்கவும், அதிகாரப்பூர்வமற்ற செயலிகளை பதிவிறக்கவும் அல்லது தொலைபேசி, மின்னஞ்சல் மூலம் அழைப்புகளை மாற்றவும் கேட்க மாட்டார்கள் என்றும் நினைவூட்டப்பட்டுள்ளது.
மேலும்,அந்நியர்கள் அல்லது சரிபார்க்கப்படாத நபர்களுக்கு பணம், கிரிப்டோகரன்சி அல்லது மதிப்புமிக்க பொருட்களை வழங்க வேண்டாம் என்றும், தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம் என்றும் காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.