சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பிரதமர் லாரன்ஸ் வோங் மற்றும் மூத்த அமைச்சர் லீ சியான் லூங் ஆகியோர் ஆசிரியர்களா ஆசிரியர்கள் அனைவருக்கும் “ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்” தெரிவித்தனர்.
பிரதமர் வோங் இன்று (செப்டம்பர்) 5ஆம் தேதி சமூக வலைதளமான பேஸ்புக்கில் ஒரு பதிவு வெளியிட்டார். ஆசிரியர்கள் மாணவர்களுடைய குணத்தை வளர்ப்பதில் பொறுமை மற்றும் பணிகளில் அர்ப்பணிப்புடன் இருப்பதாக கல்வியாளர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுடைய ஆர்வத்தை தூண்டுவதற்கும் அவர்கள் அவர்களுக்கு நல்வழிகளை புகட்டுவதற்கும் ஆசிரியர்களை முழு பொறுப்படையவர்கள் என்று கூறினார்.
தற்பொழுது வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகத்தில் வரும் புதிய சவால்களை அறிவு திறன் கொண்டு சமாளிக்க ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உதவ வேண்டும்.
அவர்களுடைய சிந்தனை திறனை வெளிப்படுத்தவும் மற்றும் பொறுப்பான தொழில்நுட்ப பயனர்களாக மாறுவதற்கு நல்வழிகளையும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.
இன்று (செப்டம்பர்) பள்ளி விடுமுறை தொடங்குகிறது இதனை கருத்தில் கொண்டு இந்த நல்வாழ்த்துக்கள் ஆசிரியர்கள் பயன்படுத்தி பள்ளியாண்டின் கடைசி செமஸ்டருக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று திரு லீ கூறினார்.