சிங்கப்பூரை அதிரவைத்த தொடர் வன்முறை..!! என்ன நடந்தது.??

சிங்கப்பூரை அதிரவைத்த தொடர் வன்முறை..!! என்ன நடந்தது.??

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் பல்வேறு இடங்களில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக 30 முதல் 51 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்கள் மீது இன்று (02.12.25) நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது.

இந்த மூன்று அநாகரீகமான தாக்குதல் சம்பவங்களும் இந்த ஆண்டு ஜூலை முதல் நவம்பர் மாதங்களுக்கு இடையில் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஜூலை 19 ஆம் தேதி டக்ஸ்டன் சாலையில் 38 வயது நபர், 23 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர், சந்தேக நபரை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

செப்டம்பர் 14 அன்று தியோங் பாரு MRT நிலையத்தில் 47 வயது பெண்ணை அநாகரீகமாக தாக்கியதாக 30 வயது நபர் சந்தேகிக்கப்பட்டார்.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சந்தேக நபரை உடனே கைது செய்தனர்.

நவம்பர் 4 அன்று பேஃபிரண்ட் அவென்யூவில் 30 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 51 வயது ஆண் கைது செய்யப்பட்டார்.

மூன்று பேரும் தலா ஒரு அநாகரீகமான தாக்குதல் குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.குற்றவியல் சட்டத்தின் பிரிவு 354(1)ன் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்வது சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி, பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK