சிங்கப்பூரில் ஒரே நாளில் கண்டுபிடிக்கப்பட்ட இரு கடத்தல் சம்பவங்கள்..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஒரே நாளில் நடைபெற்ற இரண்டு தனித்தனி சோதனைகளில், குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) மொத்தம் 2,600க்கும் மேற்பட்ட இ-சிகரெட்டுகளை பறிமுதல் செய்தது.
இச்சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 19 மற்றும் 21 வயதுடைய இரண்டு மலேசியர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் சோதனை இட்டதில் கதவு பேனல்களில் மறைக்கப்பட்டிருந்த 1,600க்கும் மேற்பட்ட இ-சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
அதே நாளில் மாலை 7.50 மணியளவில், மற்றொரு மலேசிய கார் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதன் அன்றாடப் பொருட்களின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 1,000 இ-சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.