படகு தளத்தில் தீ விபத்து..!!80 பேர் வெளியேற்றம்..!!

படகு தளத்தில் தீ விபத்து..!! 80 பேர் வெளியேற்றம்..!!

சிங்கப்பூர்: படகு துறைமுகத்தில் நேற்று (20.01.26) இரவு தீ விபத்து ஏற்பட்டது.
படகு தளத்தில் உள்ள 78வது பிரிவின் முதல் மாடியில் இருக்கும் சமையல் உபகரணங்களில் இருந்து தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்தது.


சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினருக்கு நேற்று இரவு சரியாக 11:20 மணி அளவில் படகு தளத்திலுள்ள 78 வது பிரிவின் தீ விபத்து சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக தெரிவித்தனர்.

அதிகாரிகள் தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக காவல்துறையினரும் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினரும் தீ விபத்து ஏற்பட்டதற்கு அருகில் இருந்து 80 பெயரை வெளியேற்றினர்.

அங்கிருந்த ஒருவர் புகையை சுவாசித்ததன் காரணத்தினால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஆனால் அவரை பரிசோதித்த துணை மருத்துவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

தீ விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK