சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நேற்று(02.02.26) மாலை நெரிசல் நேரத்தில்,கேலாங்-பயோ லெபார் விரைவுச்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் தகவலின்படி, மாலை 6.30 மணியளவில்,தெம்பனிஸ் சாலை வெளியேறும் இடத்திற்கு முன்பாக, தெம்பனிஸ் விரைவுச்சாலை நோக்கிச் சென்ற கேலாங்-பயோ லெபார் விரைவுச்சாலையில் போக்குவரத்து விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது.