இந்த விபத்து குறித்த தகவலானது சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினருக்கு, தோ பயோவில் உள்ள லோரோங் 7 இல் நேற்று சரியாக பிற்பகல் 2:50 மணி அளவில் கிடைத்தது.
விரைந்து வந்த தற்காப்பு படையினர் காயமடைந்த சிறுவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய 39 வயதை சேர்ந்த ஆண் ஓட்டுனரை போலீசார் விசாரித்து வருவதாக தெரியவந்துள்ளது.