சிங்டெல்–என்விடியா இடையே கையெழுத்தான முக்கிய ஒப்பந்தம்..!!
சிங்கப்பூர்: சிங்டெல் நிறுவனத்தின் துணை நிறுவனமான டிஜிட்டல் இன்ஃப்ராகோ, அமெரிக்க சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளுக்கான சிறப்பு மையத்தை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
இரு தரப்பும் இன்று(24.02.26) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. புதிய பயன்பாட்டு AI சிறப்பு மையம்,பொங்கல் டிஜிட்டல் மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ளது. வணிகங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் AI பைலட் திட்டங்களை விரைவாகவும் குறைந்த செலவிலும் நடத்தவும், அவற்றின் திறன்களை ஆழப்படுத்தவும், இந்த பைலட் முடிவுகளை உற்பத்தியில் வைக்கவும் உதவும்.
மேலும், இந்த மையத்தின் மூலம் நிறுவனங்கள் என்விடியாவின் செயற்கை நுண்ணறிவு தளத்தைப் பயன்படுத்தி நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கலாம். அதேசமயம் சிங்டெல் குழுமத்தின் தொழில்நுட்பம்,நெட்வொர்க் மற்றும் இணைய பாதுகாப்பு திறன்களும் இணைக்கப்பட்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நிறுவனங்களும் “இறையாண்மை செயற்கை நுண்ணறிவு” தத்தெடுப்பை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளன. அதன்படி நெக்சேரா நிறுவனத்தின் பிராந்திய தரவு மைய தள வடிவமைப்புகள் உருவாக்கப்பட்டு, அடுத்த தலைமுறை கிராபிக்ஸ் செயலிகளை ஆதரிக்கும் உயர் திறன் சேவையகங்கள் 2027 முதல் 2029 வரை அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
குறைந்த தாமத நெட்வொர்க்குகள் மூலம் நிகழ்நேர முடிவெடுப்பை ஆதரிக்கும் எட்ஜ் AI ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிலும் மையம் பங்கெடுக்க உள்ளது. இது தன்னியக்க ஓட்டுநர் அமைப்புகள் மற்றும் சிக்கலான இயந்திர பயன்பாடுகளுக்கு ஆதரவாக இருக்கும்.
இந்த ஒத்துழைப்பு சிங்கப்பூரில் வலுவான மற்றும் நம்பகமான செயற்கை நுண்ணறிவு சூழலை உருவாக்க உதவும் என டிஜிட்டல் இன்ஃப்ராகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாங் சூகாய் தெரிவித்துள்ளார். இன்று(24.02.26) நடைபெறும் நிகழ்வில் டிஜிட்டல் மேம்பாடு மற்றும் தகவல் துறையின் மூத்த துணை அமைச்சர் சான் கியாட் ஹவ்வும் கலந்து கொண்டார்.