சீனாவில் ஏற்பட்ட வெடி விபத்து..!! 21 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!!
சீனா: ஹுனான் மாநிலத்தில் உள்ள லியுயாங் ஹூவாஷெங் பட்டாசு ஆலையில் திடீரென பெரும் விபத்து ஏற்பட்டது.
பெரும்பாலான கட்டிடங்களின் கூரைகள் சிதறியது. இதில் பணியாற்றிய ஊழியர்களில் 21 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் மேலும் 61 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் நிறுவனத்தை நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்து விடை விபத்து ஏற்பட்டதன் காரணத்தை விசாரித்து வருகிறது.
அதிபர் சி சின்பிங் இந்த பட்டாசு வெடி விபத்தை முழுமையாக விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். விபத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.