சிங்கப்பூரில் முதலாளி நம்பி கொடுத்த பாஸ்வேர்டு.. திருடிய $17,300 பணத்தை சூதாட்டத்தில் இழந்த கடை உதவியாளர்! சிக்கியது எப்படி?

சிங்கப்பூரில் முதலாளி நம்பி கொடுத்த பாஸ்வேர்டு.. திருடிய $17,300 பணத்தை சூதாட்டத்தில் இழந்த கடை உதவியாளர்! சிக்கியது எப்படி?

சீனப் புத்தாண்டு விடுமுறைக் காலத்தில் தன் மீது முதலாளி வைத்த நம்பிக்கையைப் பயன்படுத்தி, கடையின் பாதுகாப்பகத்திலிருந்து (Safe) பெருந்தொகையைத் திருடி, அதனைச் சூதாட்டத்தில் இழந்து கைதான மலேசிய ஊழியருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 11-ல் உள்ள ‘டாப் டுரியான் ஸ்டேஷன்’ (Top Durian Station) என்ற டுரியான் கடையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நடந்தது என்ன?
டுரியான் கடையில் உதவியாளராகப் பணியாற்றி வந்தவர் 26 வயது மலேசியரான டான் ஆன் ஷெங் (Tan An Sheng). சீனப் புத்தாண்டு விடுமுறையின் போது கடையின் மேற்பார்வையாளர் விடுப்பில் சென்றதால், கடையை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு டானிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், கடையின் அன்றாடப் பணப்பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பாக வைக்கப் பயன்படும் இரும்புப் பெட்டியின் (Safe) பாஸ்வேர்டும் (ரகசிய குறியீடு) அவர் மீது கொண்ட நம்பிக்கையின் பேரில் வழங்கப்பட்டது.

ஆனால், அந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்யும் வகையில், கடந்த பிப்ரவரி 20 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இரண்டு முறை அந்தப் பெட்டியைத் திறந்து மொத்தம் S$17,300 பணத்தை டான் திருடியுள்ளார்.

சூதாட்டக் கூடத்தில் இழந்த பணம்:
பாதுகாப்பகத்திலிருந்து திருடிய பணத்துடன் நேராக மரினா பே சேண்ட்ஸ் (MBS) சூதாட்டக் கூடத்திற்குச் சென்ற டான், அங்கிருந்த கேசினோவில் (Casino) சூதாடித் திருடிய முழுத் தொகையையும் முற்றிலும் இழந்துள்ளார்.

இதுமட்டுமன்றி, அக்கம் பக்கத்திலிருந்த கடைகளிலும், தனக்கு போக்குவரத்து விதிமீறல் அபராதம் (Traffic Summons) விழுந்துவிட்டதாகப் பொய் கூறி சிலரிடம் பணம் கடன் வாங்கியும் அவர் சூதாடியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிக்கியது எப்படி?
விடுமுறை முடிந்து கடையின் இயக்குநர் வந்து சோதித்தபோது, பாதுகாப்பகத்தில் இருந்த பணம் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து ஜூன் 1-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் டானைக் கைது செய்தனர்.

நீதிமன்றத் தீர்ப்பு:
நீதிமன்றத்தில் தன் மீதான நம்பிக்கை மோசடி (Criminal Breach of Trust) குற்றச்சாட்டை டான் ஆன் ஷெங் ஒப்புக்கொண்டார்.

இது ஏதோ தற்செயலாக நடந்த தவறு அல்ல, திட்டமிட்டு நடத்தப்பட்ட குற்றச்செயல் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், முதலாளியின் நம்பிக்கையைச் சிதைத்து மோசடியில் ஈடுபட்ட டானுக்கு 5 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.