அதில் 4வது பாதையில் இருந்த லாரி, முதல் பாதைக்கு விலகி மற்றொரு வாகனத்தின் மீது மோதி, இறுதியாக விரைவுச் சாலையின் மையத்தடுப்பில் சிக்கிக் கொள்வதை காண முடிகிறது.
கார் மற்றும் 2 லாரிகள் சம்பந்தப்பட்ட சாலை விபத்து ஏற்பட்டுள்ளதாக ஜூன் 27ஆம் தேதி அன்று மதியம் 25 மணி அளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் காவல்துறையினர் உறுதி செய்தனர்.
இந்த விபத்து குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்தில் ஏற்பட்ட காயங்கள் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.