3 மாதங்களாக சம்பளம் இல்லை..!! MOM-ல் குவிந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்..!!

3 மாதங்களாக சம்பளம் இல்லை..!! MOM-ல் குவிந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்..!!

சிங்கப்பூரின் KPA பொறியியல் நிறுவனம் கடந்த 3 மாதங்களாக, நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காததால், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இது குறித்து மனிதவள அமைச்சகத்திடம் (MOM) புகார் அளித்துள்ளனர்.

இது குறித்த நிறுவனத்தின் தொழிலாளர் ஒருவர் ஊடக நிறுவனத்திடம் கூறியதாவது: சம்பளம் வழங்கப்படும் என்று நிறுவனம் கூறிக் கொண்டே இருந்ததாகவும், பிறகு இந்த மாதம் 18ஆம் தேதி சம்பளம் வழங்கப்படும் என கூறியது. ஆனால் மறுபடியும் சம்பளத்தை நிறுவனம் கொடுக்க தவறியது என்று கூறியுள்ளார்.

சிங்கப்பூர் வேலை வாய்ப்புச் சட்டத்தின்படி, சம்பளக் காலம் முடிந்து 7 நாட்களுக்குள் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பது MOM -ன் முக்கிய விதிமுறைகளில் ஒன்றாகும்.

அவ்வாறு இருக்கையில் 3 மாதங்கள் வரை சம்பளம் வழங்காமல் இழுத்தடிப்பது என்பது மிகவும் கடுமையான வேலை வாய்ப்புச் சட்ட மீறலாகும். இதற்காக அந்நிறுவனங்களுக்கு அபராதம் அல்லது கடுமையான நிர்வாகத் தடைகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

பாதிக்கப்பட்ட ஊழியர்கள் சம்பள பாக்கி மற்றும் வேலைவாய்ப்பு தகராறுகளைத் தீர்ப்பதற்காக Tripartite Alliance for Dispute Management (TADM) -யை அணுகி அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்கலாம்.

மேலும் தங்களது சிங்பாஸ் கணக்கைப் பயன்படுத்தி MOM Employment Act Violation portal மூலமாகவும் நிறுவனத்தின் விவரங்களைக் குறிப்பிட்டு ஆன்லைனில் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அளிக்கப்படும் தொழிலாளர்களின் அடையாளங்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்கள் முற்றிலும் ரகசியம் காக்கப்படும்.

MOM மற்றும் TADM அமைப்புகளை இந்த சம்பள விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டு தொழிலாளர்களுக்கான நிலுவைச் சம்பளத்தை மீட்டெடுக்க தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK