சிங்கப்பூரில் உணவு பொருட்கள் எவ்வளவு உற்பத்தி செய்கிறார்கள்? உங்களுக்கு தெரியுமா? 06/06/2025 / sgtamilan, singapore, singapore news, worldnews Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link சிங்கப்பூரில் உணவு பொருட்கள் எவ்வளவு உற்பத்தி செய்கிறார்கள்? உங்களுக்கு தெரியுமா? சிங்கப்பூர்:சிங்கப்பூரர்கள் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் உணவை உட்கொள்வது குறைந்துள்ளது.ஆனால் உள்ளூர் பண்ணைகளில் உற்பத்தியாகக் கூடிய முட்டையை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.2030 ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூர் தனது உணவில் 30 சதவீதத்தை உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. உள்ளூர் பண்ணைகளிலிருந்து விளைச்சல் சற்று அதிகரித்துள்ள நிலையில், அவ்வாறு செய்யத் தேர்ந்தெடுக்கும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.சிங்கப்பூரில் முட்டை உற்பத்தி கடந்த ஆண்டு 13 சதவீதம் அதிகரித்து, நாட்டின் தேவையில் மூன்றில் ஒரு பங்கைப் பூர்த்தி செய்தது.பண்ணைகளில் ஏற்பட்டுள்ள மேம்பாடுகள் மற்றும் செயல்முறை மாற்றங்களே இந்த அதிகரிப்புக்குக் காரணம். சிங்கப்பூரில் S- Pass இல் டிரைவர் வேலை வாய்ப்பு!! ஆனால் அதுவே காய்கறிகளின் உற்பத்தியை பொருத்தவரை சுமார் 3 சதவீதம் குறைந்துள்ளது.இருப்பினும், மகசூல் சுமார் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.உள்ளூர் பண்ணைகள் இப்போது நாட்டின் காய்கறி தேவைகளில் 3 சதவீதத்தை பூர்த்தி செய்கின்றன.சிங்கப்பூரில் உட்கொள்ளப்படும் உணவில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை இறக்குமதி செய்யப்படுகின்றன.எனவே நாடுகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!!