சிங்கப்பூர் காவல் படை வழங்கிய விருது..!! எதற்காக..?? யாருக்கு..??
சிங்கப்பூர் காவல்துறை கடலோர காவல் படை நேற்று(ஜூன் 16) புலாவ் உபின் தீவின் வடக்கு கடற் பகுதியில் பொதுநல விருது வழங்கும் விழா நடந்ததாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஜூன் 2 ஆம் தேதி அன்று மீனவர் அஸ்ரி, மலேசியாவின் கடல் எல்லைக்குள் ஒரு விதவைக்கு அருகே நங்கூரம் இடப்பட்டிருந்த சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட ஒரு சொகுசு படகை பார்த்துள்ளார்.
அந்த பகுதியில் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட படகுகள் மிகவும் அரிதாகவே காணப்படுவதால் அந்த படகு இருந்தது அவருக்கு சந்தேகத்தை தூண்டியுள்ளது.
உடனே அந்த படத்தின் புகைப்படம் ஒன்றை எடுத்து அதன் நிலைமையை சரிபார்ப்பதற்காக கிரில்லுக்கு அனுப்பியுள்ளார். மேலும் அதே நாளில் கிரில் ஒரு கடலோர காவல் ரோந்து படகை கண்டறிந்து அதன் நிலைமையைப் பற்றி காவல்துறைக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
அவர்கள் கூறிய தகவலை அடுத்து இது ஒரு முக்கியமான ஒரு சான்றாக காவல்துறை எடுத்ததுடன் விசாரணை மேற்கொள்ளம் தொடங்கியது. அன்றைய தினம் முன்னதாக திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்ட படகு அந்த படகு தான் என அதிகாரிகள் அடையாளம் கண்டனர்.
உடனே மலேசியா அரசு காவல்துறை கடல்சார் காவல் படையின் உதவியுடன் கடலோர காவல் படை அந்த கப்பலை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து உரிய நபரிடம் ஒப்படைத்தது மேலும் இந்த படகு அந்த இடத்திற்கு வந்த காரணம் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த படகை கண்டுபிடித்து தந்த முகமது அஸ்ரி பின் மனாப் மற்றும் கைரில் ஃபைசல் பின் உத்மான் ஆகிய இருவரின் செயல்களை அங்கீகரிக்கின்ற வகையில் சிங்கப்பூர் காவல்துறை கடலோர காவல் படை அவர்களுக்கு பொதுநல விருது வழங்கியுள்ளது.
படகை மீட்ட அதிகாரிகளுக்கு முக்கிய தகவல்களை மலேசியா காவல்துறைக்கு வழங்கியதற்காக இரண்டு மலேசியாவை சேர்ந்த ஆண்களுக்கு SaferSG பொதுநல விருது வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் சட்ட அமலாக்க துறையில் இருந்து தப்பித்துச் செல்வதற்காக வரம்புகளை மீறி அடிக்கடி தவறாக அதிகாரங்களை பயன்படுத்துகின்றனர் எனவும் இந்த வழக்கு சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையிலான எல்லை தாண்டிய கூட்டான்மையின் சாதனைகளை முழுமையாக எடுத்துக்காட்டியுள்ளது என்றும் காவல்துறை கூறியுள்ளது.
கடலில் சந்தேகம் ஏற்படும் விதமாக கப்பல்கள் அல்லது நடவடிக்கைகள் ஏதேனும் புலப்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்குமாறு பொதுமக்களை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.