சிங்கப்பூரில் உள்ள பணிப்பெண்கள் அவசியம் இந்த விதிமுறையை தெரிஞ்சுக்கோங்க..!!!

சிங்கப்பூரில் உள்ள பணிப்பெண்கள் அவசியம் இந்த விதிமுறையை தெரிஞ்சுக்கோங்க..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 7 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ள வீடுகளில் பணிபுரியும் வெளிநாட்டு பணிப்பெண்களுக்கு measles என்று அழைக்கப்படும் தட்டம்மைக்கு எதிராக தடுப்பூசி போடுவதை முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும்.

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் இது அமலுக்கு வரும் என்று மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளது.

வீட்டில் உள்ள குழந்தைக்கு முழுமையாக தட்டம்மை தடுப்பூசி போடப்படவில்லை என்றால், பராமரிப்பாளர் தடுப்பூசி போடுவது அவசியம் என்று கூறப்படுகிறது.

சிறு குழந்தைகள் தட்டம்மையால் கடுமையாக பாதிக்கப்படலாம்.

எனவே பொது சுகாதார மீள்தன்மையை மேம்படுத்தவும், இளம் குழந்தைகளைப் பாதுகாக்கவும் புதிய நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தட்டம்மை காற்று வழியாக எளிதில் பரவுகிறது.

சிங்கப்பூரில் பலர் இதற்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும், இன்னும் பரவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே, வீட்டுப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவது இளம் குழந்தைகளுக்கு தொற்று ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும். 

செப்டம்பர் 1 முதல் கடைப்பிடிக்க வேண்டியவை:

1) பணிப்பெண் தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டாரா அல்லது அவருக்கு அதற்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதா?

2) 7 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தட்டம்மை தடுப்பூசி முழுமையாக போடப்பட்டுள்ளதா? 

3) பணிப்பெண்ணுக்கு இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை, ஆனால் அவர் அதற்காக பதிவு செய்திருக்கிறாரா ?

புதிய பணிப்பெண்ணுக்கு பணி அனுமதி பெற அல்லது தற்போது பணிபுரியும் பணிப்பெண்ணின் பணி அனுமதியைப் புதுப்பிக்க, முதலாளிகள் அமைச்சகத்திற்கு இந்த விவரங்களை எல்லாம் வழங்க வேண்டும்.