அதிர்ச்சி…!! உட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்…!!!

அதிர்ச்சி...!! உட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்...!!!

சிங்கப்பூர்: உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் சுமார் 1.4 கிலோகிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதை சிங்கப்பூருக்குள் கடத்த முயன்றதற்காக 30 வயது மதிக்கத்தக்க மலேசிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது காரை சோதனை செய்தபோது மேலும் பல போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

🔴 495 கிராம் கஞ்சா

🔴 115 கிராம் ‘ஐஸ்’

போன்ற போதை பொருட்கள் அந்த நபரின் காரிலிருந்தும் பறிமுதல் செய்யப்பட்டது.


பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு தோராயமாக 173,000 வெள்ளி இருக்கும் என்று கூறப்படுகிறது.

இவை கிட்டத்தட்ட 800 போதைப்புழங்கிகள் ஒரு வாரத்திற்கு பயன்படுத்தக்கூடிய அளவாகும்.

சிங்கப்பூரில் போதைப் பொருட்கள் விற்பதும், பயன்படுத்துவதும் சட்டப்படி குற்றமாகும்.

சிங்கப்பூருக்குள் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை போன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.