பாட்டிலில் பூனைக்குட்டியை அடைத்து சித்ரவதை செய்த சம்பவம்!!

துவாஸில் ஒரு கட்டுமான ஊழியர் ஒரு பூனைக் குட்டியை ப்ளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து மீண்டும் மீண்டும் உருட்டி துன்புறுத்திய சம்பவம் குறித்து தேசிய பூங்கா வாரியம் புகார் ஒன்றை பெற்றுள்ளதை அது உறுதிப்படுத்தியது.தற்போது விசாரித்து வருவதாகவும் தெரிவித்தது.
மார்ச் 26 ஆம் தேதி அன்று இரவு 9.45மணி முதல் இரவு 10.30 மணி வரை ஒரு ஊழியர் பூனைக் குட்டியை ஒரு ப்ளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து மீண்டும் மீண்டும் உருட்டியதாக கூறப்படுகிறது.துவாஸ் டெக் பார்க் கிரசென்ட்டில் உள்ள ஒரு ஊழியர் உணவகத்தில் இச்சமபவம் நடந்தது.
இச்சம்பவம் குறித்து புகார் கிடைத்ததாக விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டம் தெரிவித்துள்ளது.
விலங்குகளை கொடுமை படுத்தும் தொடர்பான புகார்களை அதிகாரிகள் பெற்று கொள்வார்கள் என்றும்,சந்தேகத்திற்குரிய விலங்குகள் கொடுமை சம்பவங்கள் கண்டறியப்பட்டால் பொதுமக்கள் முன்வந்து ஆதாரங்கள் மற்றும் தடயங்களை வழங்குமாறு ஊக்குவிக்கிறது.
Follow us on : click here
WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan