மலேசியாவில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் சிங்கப்பூரர்கள்!! அவர்கள் செய்த குற்றம் என்ன? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…..

மலேசியாவில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் சிங்கப்பூரர்கள்!! அவர்கள் செய்த குற்றம் என்ன? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்.....

மலேசியாவில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக சந்தேகிக்கப்படும் மூன்று சிங்கப்பூரர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.

கடந்த வியாழக்கிழமை கோலாலம்பூரின் அம்பாங் ஜெயாவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வெளியே மலேசிய காவல்துறை சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.இந்த நடவடிக்கையில் 57 வயதுடைய மலேசிய சீன ஆண் டிரைவர் மற்றும் மூன்று சிங்கப்பூரர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக தகவல்களை கூறுகிறது.அவர்களுக்கு 25 முதல் 46 வயதுக்குட்பட்டவர்கள்.

அவர்கள் சர்வதேச சந்தைக்கு போதைப்பொருள் கொண்ட இ-சிகரெட்டுகளை கடத்தியதாக சந்தேகிக்கப்படுகின்றனர்.

ஜூன் 26 ஆம் தேதி (நேற்று) காலை கோலாலம்பூரில் உள்ள அம்பாங்க் நீதிமன்றத்தில் நான்கு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

நால்வரும் 9.42 லிட்டர் திரவ கோகோயினை கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டனர்.பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு RM 7.29 மில்லியனுக்கும் அதிகமாகும்.இந்த திரவ கோகோயின் 4958 இ-சிகரெட்டுகளில் நிரப்பட்டிருந்தது.

இவைகளை காவல்துறை பறிமுதல் செய்தது.

அவர்களுடைய குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.மேலும் குறைந்தது 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

செப்டம்பர் 8 ஆம் தேதி இந்த வழக்கின் அடுத்த விசாரணை நடைபெறும்.