சிங்கப்பூரில் உள்ள பள்ளிவாசலில் ஏற்பட்ட சர்ச்சை..!!!

சிங்கப்பூரில் உள்ள பள்ளிவாசலில் ஏற்பட்ட சர்ச்சை..!!!

சிராங்கூன் நாட்டில் உள்ள அல் இஸ்டிகமா பள்ளிவாசலுக்கு சந்தேகத்திற்குரிய ஒரு நபர் பொட்டலம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்த தகவலை காவல்துறைக்கு செப்டம்பர் 24ஆம் தேதி மாலை 5:20 மணிக்கு அனுப்பப்பட்டது.

பொட்டலத்தை காவல்துறையினர் பரிசோதித்த போது அதனுள் பன்றி மாமிசம் இருந்தை கண்டுபிடித்தனர்.

காவல்துறை பள்ளிவாசலுக்கு பன்றி மாமிசத்தை பொட்டலத்தில் வைத்து அனுப்பியதாக சந்தேகத்தின் பெயரில் மறுநாள் (செப்டம்பர்) 25ஆம் தேதி 61 வயது சீன ஆடவரைக் கைது செய்தது.

இந்த சம்பவம் வேண்டுமென்றே இன உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்தோடு செய்ததாக அவர்மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதே போன்ற சம்பவங்கள் சிங்கப்பூரில் உள்ள இன்னும் சில பள்ளிவாசல்களில் நடந்துள்ளது. இதற்கு காரணம் கைது செய்யப்பட்ட நபர் ஆவார். இந்த தகவல் ஆனது, முதற்கட்ட விசாரணையின் போது தெரியவந்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.