விற்பனையாளர்களின் அட்டூழியத்தால் நிம்மதியை தொலைத்த குடியிருப்பாளர்கள்..!!!

விற்பனையாளர்களின் அட்டூழியத்தால் நிம்மதியை தொலைத்த குடியிருப்பாளர்கள்..!!!

சிங்கப்பூர்: ரெட் ஹில்ஸ் புக்கிட் மேரா சென்ட்ரல் பகுதிகளில் கடந்த ஒரு வருடமாக, துரியன் மற்றும் பிற பழங்களை விற்கும் கடைகள் காலை முதல் இரவு வரை அதிக ஒலியுடன் இசை வாசிப்பதால், குடியிருப்பாளர்கள் ஓய்வுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார் பெறப்பட்டுள்ளது.

 

திரு. ஹுவாங் பிளாக் 119 வசிக்கும் அவர் இது குறித்து கூறியதாவது,காலை 11 மணி முதல் இரவு 8–9 மணி வரை சில நேரங்களில் பியானோ இசை, சில நேரங்களில் வேகமான பாடல்கள் தொடர்ந்து ஒளித்துக் கொண்டே இருக்கிறது.இது ஓய்வெடுக்கும் நேரத்தில் மனநிலையை வெகுவாக பாதிப்பதாக தெரிவித்துள்ளார்.

தஞ்சோங் பகார் நகர சபை கடைகளுக்கு நினைவூட்டல் அனுப்பி, சத்தத்தை குறைத்து, பொதுமக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் தொந்தரவு ஏற்படாமல் இருக்குமாறு அறிவுறுத்தியது.ஆனால் ஸ்பீக்கர்கள் இன்னும் அகற்றப்படவில்லை என்றும், கடைகளில் சத்தம் மீண்டும் ஒலிக்கிறது என்று திரு. ஹுவாங் தெரிவித்தார்.

 

அருகிலுள்ள மற்றவர்கள் சிலர் இசை பெரிய தொந்தரவாக இல்லை என்றும் கூறியுள்ளனர். பிளாக் 121 இல் வசிக்கும் ஹாங் சியாங்ஷெங், “இசையை இரவு 10 மணியளவில் நிறுத்துகிறார்கள், ஒலி அளவு ஏற்றுக்கொள்ளக்கூடியது” என்று தெரிவித்தார்.

நகர சபை விடுத்த பலமுறை எச்சரிக்கைகளுக்குப் பிறகும் கடை உரிமையாளர்கள் இந்தப் பிரச்சினையை சரிசெய்யவில்லை என்றால், வணிக உரிமையை பின்தொடர வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியத்திடம் புகார் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கூடுதல் புகார்களில், கடை உரிமையாளர்கள் பொதுப் பகுதியை தனிப்பட்ட தோட்டமாக மாற்றியதாகவும், சட்டவிரோத செடிகளை நடச் செய்ததாகவும் திரு. ஹுவாங் குற்றச்சாட்டு செய்துள்ளார். 

 

இந்த விவகாரத்தில் நகர சபை தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK