தெம்பனிஸ் HDBயில் நடக்கும் தொடர் சம்பவங்களால் அதிர்ச்சி..!!
சிங்கப்பூர்: தெம்பனிஸ் பகுதியில் உள்ள சில HDB உயர்கட்டிடங்களில் இருந்து பொருட்கள் வீசப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால் குடியிருப்பாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
போர்வைகள், இரத்தக் கறை படிந்த சானிட்டரி நாப்கின்கள், கண்ணாடி பாட்டில்கள், அழுக்கு டயப்பர்கள் உள்ளிட்ட பொருட்கள் அடிக்கடி ஜன்னல்களில் இருந்து கீழே வீசப்படுகின்றன.
தெம்பனிஸ் 499C தொகுதியில் வாழும் குடியிருப்பாளர்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை குப்பை வீசப்படுவதாகவும் சில நேரங்களில் கண்ணாடி பாட்டில்கள் கூட வீசப்படுவதாகவும் கூறியுள்ளனர்.
குடியிருப்பாளர்கள் கண் முன்னே நடந்த சம்பவம்
70 வயது ஒரு பெண் கூறுகையில், “நேற்று ஒரு பெரிய வாளியை யாரோ ஜன்னலிலிருந்து எறிந்ததை என் கண்களால் பார்த்தேன். அது தரையில் விழும்போது ஒரு பெரிய சத்தம் கேட்டது. பின்னர் ஒருவர் போர்வையையும் எறிந்தார்” என்றார்.
உயரமான கட்டிடங்களில் இருந்து பொருட்களை வீசுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். முதல் குற்றத்திற்கு S$2,000 வரை அபராதம், இரண்டாவது குற்றத்திற்கு S$4,000 வரை அபராதம்,மூன்றாவது மற்றும் அதற்கு மேற்பட்ட குற்றங்களை செய்தால் S$10,000 வரை அபராதம் + சுத்தம் செய்யும் பணியை எதிர்கொள்ள நேரிடும்.