22 வயது மலேசிய இளைஞர் கைது..!!பின்னணி தெரியுமா..??
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்த மலேசியர் ஒருவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை (11.10.25) மற்றும் செவ்வாய்க்கிழமை (14.10.25) மூன்று பேர் காவல்துறைக்கு புகார்கள் அளித்தனர். அவர்களை சிங்கப்பூர் நாணய ஆணைய அதிகாரியாகக் காட்டிக் கொண்ட அந்த மோசடியாளர், தங்க நகைகள் மற்றும் S$32,000 க்கும் அதிகமான பணத்தை அந்நியர் ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார்.
முழுமையான விசாரணைக்குப் பிறகு, இந்த வழக்கில் தொடர்புடைய 22 வயது மலேசிய நபரின் அடையாளத்தை காவல்துறையின் மோசடி தடுப்புப் பிரிவு உறுதிப்படுத்தியது.அவர் நேற்று (16.10.25) மீண்டும் நாட்டிற்குள் நுழைந்தபோது கைது செய்யப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் இதே போன்ற பிற வழக்குகளிலும் தொடர்புடையவராக சந்தேகிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. மோசடியின் மூலம் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை சேகரித்து,பிறர் அறிவுறுத்தலின் பேரில் பின்னர் பாதிக்கப்பட்டவர்களிடம் அவற்றை ஒப்படைத்துள்ளார்.