தீ விபத்தில் 20 பேர் உயிரிழப்பு..!! எந்த நெடுஞ்சாலையில்?
பெங்களூருக்கும் ஹைதராபாத்தில் இருக்கும் இடையில் உள்ள நெடுஞ்சாலையில் இன்று(24/20/2025) அதிகாலை 3:30 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தானது தனியார் பேருந்து ஒன்றும் மற்றும் மோட்டார் சைக்கிள் எதிர் எதிர் மோதியதில் எரிபொருள் கசிவு மற்றும் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த நேரத்தில் 41 பயணிகள் பேருந்தில் பயணம் செய்துள்ளதாகவும், இதில் 21 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடக அறிக்கையில் வெளிவந்துள்ளது.
இதில் மீதமுள்ள 11 பயணிகளின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளூர் அதிகாரிகள் ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல் இடம் தெரிவித்துள்ளனர்.
இதே போல ஒரு பயங்கர தீவிபத்து இந்திய மாநிலமான ராஜஸ்தானில் ஒரு தனியார் பேருந்தில் ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த ஆண்டு (2025) ஜனவரியில் இந்தியா வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு நாடு முழுவதும் சாலை விபத்துக்கள் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 1,80,000 ஆகும்.
இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக இருந்தாலும் கூட சாலைப்போக்குவரத்து விபத்துகளானது உலக அளவில் ஒப்பிடும்போது இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.