கிராப் தளத்தில் அரங்கேறிய பெரிய மோசடி..!! நால்வர் பிடிபட்டது எப்படி..??

கிராப் தளத்தில் அரங்கேறிய பெரிய மோசடி..!! நால்வர் பிடிபட்டது எப்படி..??

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் போலி வேலை விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து ஆன்லைன் சேவையான கிராப்பை ஏமாற்றியதாக நான்கு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர்கள் சுமார் S$58,000 தொகையை மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு மே முதல் ஜூலை மாதம் வரை பல தவறான ஆர்டர்கள் முடிக்கப்படாமல் இருந்ததை நிறுவனம் கண்டறிந்தது.

இருந்தபோதும், அந்த ஆர்டர்களிலிருந்து கிடைத்த வருமானம் போலியான கிராப் வாலட்டுகளில் பதிவுசெய்யப்பட்டதாகவும், அதன் பிறகு நிறுவனம் ஜூலை 16 அன்று காவல்துறையில் புகார் அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையின் போது போலீசார் நான்கு சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

ஆரம்ப விசாரணைகள் படி, இவர்கள் போலியான கிராப் கணக்குகளை உருவாக்கி, தவறான வேலை விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து லாபம் ஈட்டியதாக தெரியவந்தது.

30 முதல் 35 வயதுக்குட்பட்ட நான்கு நபர்கள் மீது மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொருவருக்கும் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK