ஜோகூர் பாருவில் நடந்த சண்டை குறித்து விளக்கமளித்த பிரபலம்..!!!

ஜோகூர் பாருவில் நடந்த சண்டை குறித்து விளக்கமளித்த பிரபலம்..!!!

மலேசியாவின் ஜோகூர் பாருவில் உள்ள கேஎஸ்எல் ஷாப்பிங் மாலிலும் காவல் நிலையம் அருகிலும் இரண்டு சிங்கப்பூர் ஆண்கள் இடையே நடந்த சண்டை விவகாரம் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடையவர்களில் ஒருவராக சிங்கப்பூர் நடிகர் சுரேஷ் வனாஸ் தன்னை ஆன்லைனில் வெளிப்படையாக அடையாளம் காட்டி, தற்காப்புக்காகவே தான் எதிர்த்து செயல்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான கூடுதல் விவரங்களை விரைவில் வீடியோ மூலம் வெளியிட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், கேஎஸ்எல் மாலில் உள்ள ஒரு மசாஜ் பார்லரில் இந்த சம்பவம் நடந்ததாகவும், மூன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் தன்னை எதிர்த்த நிலையில் தற்காப்பு நடவடிக்கை எடுத்ததாகவும் சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் என்ன நடந்தது என்பது குறித்த முழு விவரங்களை விரைவில் பகிர்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக வெளியான தகவல்களின்படி, சுரேஷ் நேற்று முன்தினம்(24.12.25) ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டு RM1,900 (சுமார் S$601) அபராதம் செலுத்தியுள்ளார்.

மற்ற மூன்று சீன பிரதிவாதிகள் குற்றச்சாட்டுகளை மறுத்து, RM19,000 (சுமார் S$6,007) ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 27 அன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

இதற்கிடையில், சமூக ஊடகங்களில் கடந்த ஆண்டு விவோசிட்டி லிஃப்டில் நடந்த தள்ளுமுள்ளு சம்பவத்தையும் சிலர் நினைவூட்டியுள்ளனர். அந்த சம்பவம் தனது சக்கர நாற்காலியில் இருந்த சகோதரரைப் பற்றிய தவறான புரிதலால் ஏற்பட்டது என சுரேஷ் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK