சிங்கப்பூரில் SMRT ஊழியர் செய்த தில்லாலங்கடி வேலை..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் SMRT ஊழியர் ஒருவர், பகுதி நேர Grab சவாரி-ஹெய்லிங் ஓட்டுநராக பணியாற்றியதை முன்கூட்டியே அறிவிக்க தவறியதற்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஊழியர் ஜாஃபர் அப்துல் சமத், இரவில் SMRT தொழில்நுட்ப வல்லுநராகவும் பகலில் Grab ஓட்டுநராகவும் பணியாற்றியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
SMRT மனிதவளக் கொள்கையின் படி, இரண்டாவது வேலையில் ஈடுபட விரும்பும் ஊழியர்கள் முன்னதாக மேற்பார்வையாளரைத் தொடர்பு கொண்டு ஒப்புதல் பெற வேண்டும். அவர் இதை செய்ய தவறியதால் நிறுவனம் தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளது.
செவ்வாயன்று(14.10.25)வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஜாஃபர் அப்துல் சமத் முன்னதாக ஒரு சிறிய கார் விபத்து காரணமாக மற்றொரு ஓட்டுநருக்கு எதிராக குறைந்தபட்சம் S$75,000 வழக்குத் தொடர்ந்திருந்தார். இதனால் கிராப் வருமானத்தில் சுமார் S$33,750 இழந்ததாகக் கூறினார்.
இருப்பினும், அவரது அறிக்கை சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்திற்கு அறிவிக்கப்பட்ட வருமானத்துடன் பொருந்தவில்லை என்று சுட்டிக்காட்டிய நீதிபதி, அவர் கூறிய சில காயங்கள் பழைய காயங்கள் என்று தீர்மானித்து, அவர் கோரிய தொகையை விட குறைந்த இழப்பீட்டை மட்டுமே வழங்கினார்.