சிங்கப்பூரில் நிறுவனங்களின் பாதுகாப்பிற்காக நடத்தப்பட்ட பயிற்சி..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இரண்டாவது ஆண்டு தொடர்ச்சியாக, சிங்கப்பூர் வணிகக் கூட்டமைப்பு (SBF) உள்ளூர் வணிகங்களை இலக்காகக் கொண்டு ஃபிஷிங் பயிற்சியை நடத்தியுள்ளது.SG தயார் திட்டத்தின் ஒரு பகுதியாக, பிப்ரவரி 1 முதல் 5 ஆம் தேதி வரை சுமார் 140 நிறுவனங்கள் இதில் பங்கேற்றனர்.கடந்த ஆண்டு இந்த பயிற்சியில் வெறும் 25 நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
கணக்கு, பாதுகாப்பு எச்சரிக்கை, உள் தொடர்பு மற்றும் விற்பனை அறிவிப்புகள் அடங்கியிருந்தன. பயிற்சி முடிவுகள், கடந்த ஆண்டு 30% ஆக இருந்த ஃபிஷிங் மின்னஞ்சல்கள் தோராயமாக 37.5% திறக்கப்பட்டதைக் காட்டியது.இந்த ஆண்டில் சுமார் 37.5% திறக்கப்பட்டன என்பதை காட்டியது. அதே நேரத்தில், 7.4% பேர் ஃபிஷிங் இணைப்புகளை கிளிக் செய்தனர்.இது கடந்த ஆண்டு 17% கிளிக்-த்ரூ விகிதத்தைப் பார்க்கையில் குறிப்பிடத்தக்க வகையில் குறைவாகும்.
கிளிக் செய்த ஊழியர்களில் 72.5% பேர் டெஸ்க்டாப் கணினிகள் மூலம், 22.4% பேர் மொபைல் சாதனங்கள் மூலம் நடவடிக்கை எடுத்தனர். உள் தொடர்பு மற்றும் கோப்பு பகிர்வு தொடர்பான மின்னஞ்சல்கள் அதிக கிளிக் விகிதம் (11%) பெற்றுள்ளன.
அதிகாரப்பூர்வ நிறுவனங்களை போல ஆள்மாறாட்டம் செய்து அனுப்பப்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கை மின்னஞ்சல்கள் 8% கிளிக் விகிதம் பெற்றுள்ளன. இது விரிவான பாதுகாப்பு மற்றும் தொடர்பு அலுவலகம், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தொடர்ந்து வணிகங்களுக்கு இடையூறுகளுக்கு பதிலளிக்கும் திறனை மேம்படுத்த தொடர்ந்து ஒத்துழைக்கும் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
சிறந்த நடைமுறைகளை உறுதிப்படுத்த பயிற்சி அளித்தல், பின்தொடர்தல் பயிற்சிகள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட பதிலளிப்பு நடவடிக்கைகள் போன்றவை இந்த ஆண்டில் தொடரப்படும்.