அன்பால் நிரம்பிய நடைபயணம்..!!குழந்தைகளுக்காக இணைந்த சிங்கப்பூர்..!!!

அன்பால் நிரம்பிய நடைபயணம்..!!குழந்தைகளுக்காக இணைந்த சிங்கப்பூர்..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூர் குழந்தைகள் சங்கம் தனது வருடாந்திர Walk for Our Children 2025 நிதி திரட்டும் நிகழ்வை நடத்தியது. இதில் சுமார் 4,200 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்தாண்டு நிகழ்வு “கவனிப்புடன் இணைதல் பாதுகாப்பான இடத்தை உருவாக்குதல்” என்ற கருப்பொருளில் நடைபெற்றது. இது உறவுகளை வளர்ப்பதின் முக்கியத்துவத்தையும், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஆரோக்கியமாக வளர தினசரி தொடர்புகளின் அவசியத்தையும் வலியுறுத்தியது.

சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் சுகாதார அமைச்சருமான ஓங் யே குங் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

2 கி.மீ நடைபாதையில் அமைக்கப்பட்ட பத்து காட்சிப் பலகைகள் மூலம் பங்கேற்பாளர்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மன ஆரோக்கிய அடித்தளத்தை உருவாக்க அன்றாட பராமரிப்பு நடவடிக்கைகள் எப்படி உதவுகின்றன என்பதை கற்றுக்கொண்டனர்.

மேலும், திருவிழாக்கள், நிகழ்ச்சிகள், பெற்றோர்-குழந்தை செயல்பாடுகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இவை குடும்ப உறவுகளை வலுப்படுத்தவும், குழந்தைகள் மீள்தன்மை மற்றும் சுயமரியாதையை வளர்க்கவும் உதவுவதாக அமைந்தன.

இந்த நிகழ்வின் மூலம், சமூகமே குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உணர்ச்சித் தேவைகளுக்கு அதிக கவனம் செலுத்தும் என்றும், சங்கத்தின் திட்டங்களுக்கு தேவையான நிதி திரட்டப்படும் என்றும் சிங்கப்பூர் குழந்தைகள் சங்கம் நம்புகிறது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan