சிங்கப்பூரின் SME நிறுவனங்களில் அதிகரிக்கும் AI புரட்சி..!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் SME நிறுவனங்கள் வேகமாக AI பக்கம் நகர்ந்தாலும், அதை சரியாக பயன்படுத்தும் திறனில் இன்னும் பெரிய பின்தங்கல் இருப்பதாக LinkedIn புதிய அறிக்கை தெரிவிக்கிறது.தற்போது, வெறும் 26% நிபுணர்களே தரவு பகுப்பாய்வு, உத்தி திட்டமிடல் போன்ற மேம்பட்ட பணிகளில் AI ஐப் பயன்படுத்த முடிகிறது. தினசரி பணிகளில் AI பயன்படுத்துபவர்கள் இன்னும் பாதிக்கும் குறைவாக இருப்பதாக கூறுகிறது.
SMEக்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பது AI திறன் குறைபாடாகும்.குறைந்த பணியாளர் கொண்ட நிறுவனங்களில் AI திறன் வளர்ச்சி 67% இருந்தாலும், பெரிய நிறுவனங்களில் இது 99% ஆக இருந்ததால் இடைவெளி தெளிவாக தெரிகிறது.
ஊழியர்களில் பாதி பேர் AI கற்றுக் கொள்ள முதலாளி உதவுகின்றனர். ஆனால் அடுத்ததாக எந்தத் திறனை கற்க வேண்டும் என்பதில் 50% பேர் குழப்பத்தில் உள்ளனர். அதே நேரத்தில், ஊழியர்கள் நேரடியாக வேலைக்குள் பயன்படுத்தும் கற்றலையே அதிகமாக விரும்புகின்றனர்.
AI உள்ளடக்கம் பெருகியதால், “மனித குரல்” வணிகங்களுக்கு மிக முக்கியமான வேறுபடுத்தும் சக்தியாக மாறியுள்ளது. SMEக்களில் 76% நிறுவனங்கள் மனிதர்கள் உருவாக்கும் உண்மையான உள்ளடக்கமே பிராண்டை பலப்படுத்தும் என நம்புகின்றன.
கடந்த ஆண்டு 50-க்கும் குறைவான பணியாளர்களைக் கொண்ட SMEக்களில் தொழில் நெட்வொர்க் 11% உயர்ந்தது.இது பெரிய நிறுவனங்களை விட அதிகமாகும். இதனால் AI வளர்ந்து கொண்டிருந்தாலும், மனித உறவுகளே இன்னும் வணிக வெற்றியின் முக்கிய காரணம் என்பதும் தெளிவாகிறது.
மொத்தத்தில், AI 2026க்குள் SMEக்களை முன்னேற்றும் மிகப் பெரிய சக்தியாக மாறும் நிலையில், திறன் மேம்பாடு தான் அடுத்த பெரிய போராக இருக்கும்.