பெங்கோலில் நீண்டகால பசுமை வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை..!!!
சிங்கப்பூர்: குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, சமூகத்தின் நீண்டகால பசுமையாக்கும் வளர்ச்சியை நிலைநிறுத்தும் நோக்கில், பொங்கோல் நகர சபை தேசிய பூங்காக்கள் வாரியம் மற்றும் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து, சமூகப் பகுதிகளில் உள்ள சில ஆரோக்கியமற்ற மரங்களை படிப்படியாக அகற்றும் பணியை மேற்கொண்டு வருகிறது.
தேசிய மர மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வில், சில கயா மற்றும் சீ ஆப்பிள் மரங்கள் குறைந்த நடவு இடம் காரணமாக போதுமான வேர் வளர்ச்சியைக் கொண்டிருக்கவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக, காலப்போக்கில் அடிப்பகுதி அழுகல், இலைகள் அரிதாகுதல் மற்றும் தண்டுகள் சாய்வு போன்ற பிரச்சினைகள் உருவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மரங்கள் வெளிப்படையாக ஆரோக்கியமாகத் தோன்றினாலும், அவற்றின் நிலைத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதால், பலத்த காற்று அல்லது கனமழை நேரங்களில் கிளைகள் உடைதல் அல்லது முழு மரமே விழும் அபாயம் அதிகரிக்கிறது. இது பாதசாரிகள் மற்றும் சுற்றியுள்ள வசதிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என பொங்கோல் நகர சபை எச்சரித்துள்ளது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, இவ்வாறு பாதிக்கப்பட்ட மரங்கள் அகற்றப்படும் என்றும், அவற்றின் இடத்தில் அல்லது அருகிலுள்ள பகுதிகளில் நகர்ப்புற சூழலுக்கு ஏற்ற, வலுவான பூர்வீக மர இனங்கள் மீண்டும் நடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த புதிய மரங்கள் குறைந்த இடங்களில் நன்றாக வளரக்கூடியவையாக இருப்பதுடன், பசுமையான இடங்களின் மொத்த நிலைத்தன்மையை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கைகள் சமூக பசுமையின் நீடித்த வளர்ச்சியை உறுதி செய்வதோடு, குடியிருப்பாளர்களுக்கு பாதுகாப்பான, வாழக்கூடிய சூழலை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படுகின்றன என்று பொங்கோல் நகர சபை தெரிவித்துள்ளது.