சிங்கப்பூர் எல்லையில் மீண்டும் முறியடிக்கப்பட்ட கடத்தல் முயற்சி..!!
சிங்கப்பூர்: மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று, உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் நுழைய முயன்றபோது குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.
சோதனையின் போது, மோட்டார் சைக்கிளின் பல்வேறு பெட்டிகளில் 450க்கும் மேற்பட்ட வரி செலுத்தப்படாத சிகரெட் பாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்த புகைப்படங்களில், ஹூட் மற்றும் பிற இடங்களில் சிகரெட்டுகள் அடைக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.
ICA இன்று (18.09.25) வெளியிட்ட தகவலின்படி, சம்பவம் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி நிகழ்ந்தது. அதிகாரிகள் உடனடியாக அந்த மோட்டார் சைக்கிளையும் சிகரெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கு மேல் விசாரணைக்காக சுங்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.