லிட்டில் இந்தியாவில் கலை கட்டும் தீபாவளி..!!! மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன..??
சிங்கப்பூர்:லிட்டில் இந்தியாவில் தீபாவளிக்கு முன்னதாக அதிக கூட்டம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போலீசார் கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டை கடுமையாக்கி, மக்களை மதுவிலக்கை கடைப்பிடிக்க வலியுறுத்துவர்.
ஞாயிற்றுக்கிழமை (19.10.25) மற்றும் தீபாவளிக்கு முந்தைய நாள், சிராங்கூன் சாலைப்பகுதியில் அதிக கூட்டம் ஏற்படும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
எனவே பொதுமக்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்தி, தங்கள் உடைமைகளை கண்காணிக்க வேண்டும். ஓட்டுநர்கள் வேறு சாலைகளைத் தேர்ந்தெடுத்து கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும்.
அங்குலியா மசூதிக்கு முன் பிர்ச் சாலை நடைபாதை ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை மூடப்படும். பொதுமக்கள் கிச்சனர் லிங்க் அல்லது பாபூ லேன் நடைபாதையை பயன்படுத்தலாம். தேவைப்பட்டால் கேம்பல் லேனில் உள்ள நடைபாதையும் மூடப்படும்.
லிட்டில் இந்தியா மற்றும் கேலாங் பகுதிகள் மதுபானக் கட்டுப்பாட்டு மண்டலங்களாக நியமிக்கப்பட்டுள்ளன. 17ஆம் தேதி இரவு 10:30 மணி முதல் 21ஆம் தேதி காலை 7 மணி வரை பொது இடங்களில் மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களுக்கு S$1500 அபராதம், மீண்டும் குற்றம் செய்பவர்களுக்கு S$3000 அபராதம் அல்லது நான்கரை மாத சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மதுவிற்பனை செய்யும் வணிகங்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்தால் உரிமைகள் ரத்து செய்யப்படலாம்.
போலீசார் சட்டவிரோத பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்றும், ஒரே நேரத்தில் பல பட்டாசுகளை ஏற்ற வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.ஏனெனில் இது தீ அல்லது காயத்தை ஏற்படுத்தக்கூடும்.