இந்திய பயணம் குறித்துப் பகிர்ந்த சிங்கப்பூர் பிரதமர்..!!!
சிங்கப்பூர் பிரதமர் இந்தியாவிற்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வ இரண்டு நாள் பயணம் நேற்று (செப்டம்பர்) 4ஆம் தேதி முடிந்தது.
இந்தியா சென்று வந்த அனுபவங்களை சிங்கப்பூர் பிரதமர் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும் சந்தித்துள்ளார்.
மேலும் அங்குள்ள இந்தியாவின் கல்வி அமைச்சர், திரு தர்மேந்திர பிராதான், தேசிய பாதுகாப்பு அமைச்சர் திரு அஜித் டோவல் ஆகியோரைச் சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும் மேலும் விரிவு படுத்தவும் தொடர்பான பேச்சு வார்த்தைகளை பேசியுள்ளதாக சிங்கப்பூர் பிரதமர் திரு வோங் கூறினார்.