தீ பற்றிய கட்டிடம் 30 சயின்ஸ் பார்க் ரோட்டில் அமைந்துள்ளது. தீ விபத்து குறித்த தகவல் ஆனது நேற்று (ஏப்ரல் 6) மாலை 6:30 மணி அளவில் தங்களுக்கு கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சம்பவ இடத்திற்கு செல்வதற்கு முன்பே, கட்டிடத்தில் இருந்த ஊழியர்கள் தீயை அணப்பதற்கு தண்ணீர் குழாய்கள் மற்றும் உலர் தூள் தீயணைப்பான்களைப் பயன்படுத்தி தீயை அணைத்து விட்டனர்.