அவர் அதைப் பற்றி கூறுகையில் வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூரை மேம்படுத்த வேலை இடங்களில் மட்டும் பணிபுரிவதில்லை தேவைப்படும் நேரங்களில் அவர்கள் முன் வந்து பிறருக்கும் உதவுகின்றனர் பள்ளத்தில் சிக்கிய ஓட்டுனருக்கு அவர்கள் ஏழு பேருமே வெவ்வேறு வழிகளில் உதவி இருக்கின்றனர்.
அந்த இடத்தில் அவர்கள் இல்லாவிட்டால் நிலைமை வேறு மாதிரி ஆகி இருக்கலாம் என்றார் திரு தினேஷ்.
வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்கு ஆற்றும் பங்கு அவர்களின் தன்னலமற்ற செயல்கள் ஆகியவற்றிற்கும் அவர் நன்றி தெரிவித்தார்.