வெளிநாட்டு ஊழியர்களே..!!! இந்த புதிய திட்டம் உங்களுக்காகவே..!!
சிங்கப்பூர்:வெளிநாட்டு ஊழியர்களின் உடல் மற்றும் மனநலத்தை பாதுகாக்க புதிய அரசாங்க இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியில் முன்னெச்சரிக்கை பராமரிப்பு, மனநல ஆதரவு மற்றும் நல வாழ்வு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
2023 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 20,000 வெளிநாட்டு ஊழியர்கள் மனநல ஆதரவு வழங்க பயிற்சி பெற்றுள்ளனர். இவர்கள் Peer Responders (PR Supporters) என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தமக்குக் கிடைத்த பயிற்சியின் மூலம், மன அழுத்தம் அல்லது குடும்ப பிரச்சினைகள் போன்ற சூழல்களில் சிக்கியுள்ள சக ஊழியர்களுக்கு உணர்ச்சி ஆதரவு மற்றும் வழிகாட்டுதலை வழங்குகின்றனர்.
மனநல ஆதரவு குழுவின் உறுப்பினராக உள்ள வெளிநாட்டு ஊழியர் திரு. கார்த்திக் கூறியதாவது, 2023-ல் அவரது தந்தை மரணமடைந்தபோது என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்போது அவருக்கு உதவி செய்த சக ஊழியர் அவரை வழிநடத்தினார். அந்த அனுபவம் அவரை மீண்டும் சிங்கப்பூருக்கு திரும்பியபின் PR Supporter ஆக சேர தூண்டியது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 சாலை காட்சிகள் நடத்தப்படவுள்ளன.இதன் மூலம் உடல் நலம் மற்றும் மனநலத்தை பாதுகாக்கும் வழிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்நிகழ்ச்சிகள் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் நடைபெறவுள்ளன.