சிறுமியும் தாயாரும் இருக்கையில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், திடீரென்று விழித்த தாய், அந்த நபர் தன் குழந்தையிடம் தகாத முறையில் நடந்துகொள்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆடவர் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றார்.
தாயின் புகாரின் பேரில், கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த அதிகாரிகள், வெறும் 4 மணி நேரத்திலேயே சந்தேக நபரை அடையாளம் கண்டு கைது செய்தனர்.