சிங்கப்பூரில் பணிபுரியும் இந்தியருக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன தெரியுமா..??
சிங்கப்பூர்: சிங்கப்பூரைச் சேர்ந்த இந்திய கட்டுமானத் தொழிலாளி ஒருவர் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட காரணத்தால் 13 வார சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்தது எப்படி..??
41 வயதான திருப்பதி மோகன்தாஸ் என்பவர் ஏப்ரல் 29 அன்று இரவு 10:30 மணிக்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பைக் கடந்து சென்றபோது, 35 வயதான பாதிக்கப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பில் நிர்வாணமாக இருப்பதைக் கண்டார்.
இந்தக் காட்சி அவரை பாலியல் ரீதியாக தூண்டப்பட்டது.இதனால் அவர் மறுநாள் இரவு 11:30 மணிக்கு அடுக்குமாடி குடியிருப்பினுள் நுழைந்து, பால்கனியில் ஏறி பாதிக்கப்பட்டவரின் அறைக்குள் சென்றார்.
அங்கு அவர் நிர்வாணமாக தூங்குவதைப் பார்த்தார்.மேலும் அவரது கால் விரல்களையும் தொட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் விழித்தெழுந்து சத்தமாக கத்தினார்.
இதைக் கண்ட திருப்பதி மோகன்தாஸ் உடனடியாக தப்பி ஓடிவிட்டார்.
இருப்பினும், மே 3 ஆம் தேதி அதிகாலை 1:35 மணிக்கு மீண்டும் அந்தப் பெண்ணின் குடியிருப்பிற்கு திரும்பிய அவர், பால்கனியில் ஏறி சுமார் மூன்று மணி நேரம் அந்தப் பெண் தூங்குவதைப் பார்த்தார். மூன்றாவது முறையாக பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு வெளியே தங்கியிருந்தபோது அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.