சிங்கப்பூர் மாணவி மரணம் பற்றிய விசாரணை! இதைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
சிங்கப்பூர் மாணவி மரணம் பற்றிய விசாரணை! இதைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
நவம்பர் எட்டாம் தேதி தேசிய இளையர் சாதனை விருது பயணத்திற்காக மாலத்தீவுகளுக்கு பயணம் மேற்கொண்ட செயின் ஜோசஃப் அனைத்து உலக கல்வி நிலையத்தைச் சேர்ந்த 15 வயது மாணவி சென்றார்.
அப்போது திகுரா தீவில் முக்குளித்துக் கொண்டிருந்தபோது பின்னோக்கி வந்த படகு ஒன்றின் propeller கருவியால் தாக்கப்பட்டு பலத்த காயமுற்று பின்னர் மாண்டார்.
சம்பவம் குறித்து மாலத்தீவு அதிகாரிகளும் பள்ளியும் பெரிதளவில் விவரங்களை தெரிவிக்கவில்லை என்று பெற்றோர்கள் ஊடகத்திடம் தெரிவித்தனர்.
ஆனால் பள்ளியின் தலைமைச் செயல் அதிகாரி நடந்தவை குறித்து தகவல் சேகரிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக கூறினார்.